![]() யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக தோன்றியுள்ள உஷ்ணமான காலநிலை மாற்றத்தால் நவம்பர் மாதமளவில் சூறாவளியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக திருநெவல்வேலி வானிலை அவதானிப்பு நிலைய அவதானிப்பாளர் த.பிரதீபன் தெரிவித்தார். 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்ரம்பர் வரை 32.1 பாகை செல்சியஸ் உயர் வெப்பநிலையாகவும், 27.1 பாகை செல்சியஸ் சராசரி இழிவு வெப்பநிலையாகவும் , 29.4 பாகை செல்சியஸ் சராசரி வெப்பநிலையாகவும் காணப்படுவதாகஅவர் குறிப்பிட்டார். இந்த வருடத்திற்கான மழை வீழ்ச்சியாக செப்டம்பர் 30ஆம் திகதி 9.9 மில்லிமீற்றர் மழையும், ஒக்டோபர் 4ஆம் திகதி 12.06 மில்லிமீற்றர் மழையும் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த வானிலை அவதானிப்பாளர், “நவம்பர் மாதமளவில் சூறாவளியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றது. சூறாவளி வங்களா விரிகுடாவில் இருந்து இலங்கை நோக்கி வருவதற்கான சாத்தியம் உண்டு.” என்றார். இந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து செப்ரம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 356.4 மில்லிமீற்றர் வரையான மழையும், ஒக்டோபர் மாதத்தில் 300.மில்லி மீற்றருக்கும் அதிகமான மழையும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டதுடன், நவம்பர் மாதத்தில் 500 மி.மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் சாத்தியங்கள் தென்படுவதாகவும் கூறினார். 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரை 1496.4 மி.மீற்றர் மழை வீழ்ச்சி பதியப்பட்டுள்ளதுடன், ஜனவரி முதல் பெப்ரவரி வரை 513.4 மி.மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும், நவம்பர் மாதம் 402.2 மழையும் ஒக்டோபர் 115.2 மி.மீற்றர் மழையும் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். |
Friday, October 7, 2011
யாழில் நவம்பரில் சூறாவளி வீசும் சாத்தியம்– திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலையம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment