Friday, October 14, 2011

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் டிசம்பர் மாதம் வெளியீடு!!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் பாடசாலை விடுமுறைக்கு முன்னதாக வெளியிடவுள்ளன.

கடந்த 2001ஆம் ஆண்டின் பின்னர் இம்முறை புதிய மற்றும் பழைய பாடவிதானங்களின் அடிப்படையில் பரீட்சை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி உயர்தரப் பரீட்சையின் பிரதான பாடங்களுக்குரிய விடைத்தாள் மதிப்பீடுகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் தோற்றியிருந்த பாடங்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment