Thursday, September 8, 2011

மனைவியின் பாலியல் இச்சையை திருப்திப்படுத்த தவறிய கணவருக்கு அபராதம்

நீதிமன்றங்கள் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்துள்ளன. மேலும் பல விசித்திரமான தீர்ப்புக்களையும் வழங்கியுள்ளன.

அவ்வாறானதோர் தீர்ப்பினைப் பற்றியதே இச் செய்தி.

ஆம், பிரான்ஸைச் சேர்ந்த நபரொருவருக்கு தனது முன்னாள் மனைவியுடன் போதிய அளவு பாலியல் உறவினை வைத்திருக்காத காரணத்தினால் 8,500 பவுண்ஸ் நட்ட ஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

51 வயதான ஜீன் லூயிஸ் பி என்ற அந்நபருக்கு தென் பிரான்ஸைச் சேர்ந்த நீதிமன்றமொன்று அந்நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே இவ்வுத்தரவினை பிறப்பித்துள்ளது.

அந்நபரின் மனைவி 2 வருடங்களுக்கு முன்னர் தன்னோடு போதியளவு உறவு வைத்துக்கொள்ளவில்லையென்ற காரணத்தினை காட்டி விவாகரத்து பெற்றுக்கொண்டார்.

பின்னர் தனது முன்னாள் கணவர் 21 வருடங்கள் தன்னை திருப்பதிப்படுத்தாமையை காரணம் காட்டி இதற்கு 10,000 யூரோக்கள் நட்ட ஈடு வழங்கவேண்டுமெனக்கூறி மீண்டும் வழக்குத்தொடர்ந்தார்.

கணவன் மனைவிக்கெதிரான உறவு என்பது அன்பின் வெளிப்பாடு எனவும் ஒருவரையொருவர் திருப்திப்படுத்துவது கடமையெனவும் தெரிவித்த நீதிபதி மேற்படி தீர்ப்பையும் வழங்கினார்.

No comments:

Post a Comment