Saturday, November 5, 2011

ஆண்களுக்கும் உண்டு அழகு இரகசியங்கள்!


பெண்களுக்கு மட்டும் தான் அழகு இரகசியங்கள் இருக்கிறதா என்ன-?ஆண்களுக்கும் இருக்கின்றது.நீங்களும் உங்களை அழகு

படுத்தி கொள்ளும் ஆண் என்றால் உங்களுக்கான அழகு குறிப்புகள் இதோ

முகம்

*பெரும்பாலான ஆண்கள் தங்களை அழகு படுத்தி கொள்வதே இல்லை.அவர்களை பொருத்த வரையில் முக அலங்காரம்

என்பது ஷேவ் செய்வதும் மீசையை அழகு படுத்தி கொள்வது மட்டுமே

*நீங்கள் முகசவரம் செய்து கொள்வது மட்டும் அல்லாமல் பேசியல் செய்து கொள்ளலாம்.முகத்திற்கு க்ரிம் தடவி உங்களை

அழகு படுத்தி கொள்ளலாம்.அவ்வாறு முகபள பளப்புடனும் ஜொலிப்புடனும் இருக்கின்ற ஆண்களை தான் பெரும் பாலும்

பெண்கள் விரும்புகின்றனர் எனவே கொஞ்சம் முகசவரம் செய்து கொண்டு முகத்தை அழகு படுத்திடுங்கள்

சருமம்


*பெண்களை பொறுத்த வரையில் ஆண்கள் முகத்திற்கும் சருமத்திற்கும் கவனம் செலுத்துவதே இல்லை.பெண்கள் ஆண்மை

தன்மையை மட்டும் விரும்புவது இல்லை.அழகிற்கு தான் அதிக முக்கியத்துவம் தருவார்கள்.சில ஆண்களுக்கு முக
சுருக்கங்களும்  பருக்களும் அவர்கள் அழகையே கெடுத்து விடும்.நீங்கள் உங்களுக்கான க்ரிம்களை தடவி உங்கள் சருமத்தை அழகு படுத்திடுங்கள். நீங்கள் சருமத்தின் மீது கவனம் செலுத்துங்கள்பின்பு பெண்கள் உங்கள் மீது கவனம் செலுத்த ஆரம்பிப்பார்கள்

அழகு சாதனப்பொருட்கள்

*நெயில் பாலிஸ் லிப்ஸ்டிக்  ஐப்ரோ வாசனை திரவியங்கள்  என அனைத்து பொருட்கள் இருந்தாலும் ஆண்கள் அதன் மீது

ஆர்வம் கொள்ளுவது இல்லை.ஆண்கள் அளவோடு அழகுசாதனப் பொருட்களை அளவோடு பயன்படுத்துவது ஆண்களை

அழகோடு வைத்திருக்கும்

பற்கள்


*முகத்திற்கு புன்னகை சேர்க்கும் விதமாக விளங்குவது  பற்கள். அப்பற்களை எவ்வளவு சுத்தமாக பாதுகாத்து கொள்ள

வேண்டும்.ஆனால் புகைபிடிப்பது காபி டீ பருகுவது என பற்களின் நிறத்தை கெடுத்து கொள்கிறார்கள்

*பற்களின் நிறத்தை பளிர்நிற வெண்மைக்கு கொண்மைக்கு கொண்டுவர பல சிகிச்சை முறைகள்  வந்து விட்டன.தினமும்

இருமுறை பல்துலக்குவதே பற்களின் பாதுகாப்புக்குப் போதுமானது. கூந்தல் ஆண்களும் தலைமுடியை பராமரிப்பதில் நல்ல

ஆர்வம் காட்டுகிறார்கள்.

*கவர்ச்சிகரமாக முடிவெட்டிக் கொள்வது, அவ்வப்போது ஸ்டைலை மாற்றிக் கொள்வது இளைஞர்களின் வாடிக்கையாக

இருக்கிறது. இதுமட்டும் கேசப் பராமரிப்பிற்குப் போதுமானதல்ல. முடிகள் உடைந்து, உதிர்ந்து போகாமல் பார்த்துக் கொள்வது

அவசியம். தலையில் பொடுகுகள் பெருகுவது இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

*எனவே சீயக்காய், ஷாம்பு போன்ற ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கூந்தலைப் பராமரிக்கலாம்.

உடை உடை அலங்காரம் என்பது மற்ற அலங்காரங்களைவிட முக்கியமானது. எளிதானதும்கூட. கோட்-சூட், டை என்று

வருவதுதான் ஆடை அலங்காரம் என்று எண்ணிவிடாதீர்கள். சாதாரண உடைகளையும் நன்கு சலவை செய்து அணிந்தால்

போதுமானது. அழுக்கு இல்லாமலும், பட்டன்கள் அறுந்து போகாமலும் உள்ள உடைகளை அணியுங்கள்.

அணிகலன்

 
*எல்லோரிடமும் கல கலப்பாக பேசுங்கள்.நல்ல பேச்சாளன் என்ற பெயரை வாங்குங்கள்.அப்போதுதான் நீங்கள் ஒரு

இடத்தைவிட்டு நகர்ந்தாலும் அங்கு உங்களின் நினைவை நீங்காமல் இடம்பெறச் செய்வது உங்களது கனிவான பேச்சுதான்.

No comments:

Post a Comment