அபூர்வ நாளான நேற்று 11.11.11 அன்று உலகின் பல்வேறு நாடுகளில் திருமணங்கள் அரங்கேறின.உலக சாதனை படைக்கும் விதமாக சீனாவில் நேற்று மட்டும் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றன.
மேலும் கோலாலம்பூரில் உள்ள சீனர்களின் மிகப்பெரிய கோவிலில் ஒரே நேரத்தில் 400 திருமணங்கள் நடைபெற்றன. இதில் திருமணம் செய்தவர்களின் வயது வரம்பு 18 முதல் 47 வரை இருந்தது.
இந்த கோவிலில் புதிதாக திருமணம் செய்தவர்களுக்கு இரண்டு கார்களும், தேனிலவு பயணத்திற்கான தொகுப்புகள் மற்றும் பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டன.
|
No comments:
Post a Comment