![]() கண்ணீர் என்பது ஒரு மனிதன் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படும் போதும், இயலாமை எனும் உணர்வானது ஒருவனிடத்தே வருகின்ற போதும் தான் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. நாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது ‘எமக்குப் பிடித்த ஒரு பொருளை வாங்கித் தரவில்லை என்றால்’ கூப்பாடு போட்டு அழுது, தரையில் விழுந்து கத்திக் குழறித் தான் எமக்குப் பிடித்தமான பொருளைக் கேட்டு வாங்குவோம். ![]() அழுகாத பிள்ளை பால் குடிக்காது எனும் சான்றோர் வாக்கினைக் காரணங் காட்டி, ‘இன்றைக்கு ஒருவாட்டி இவன் அழும்போது, அவனது கோரிக்கைக்கு நாம் செவி சாய்த்தால், தொடர்ந்தும் அழுதுகிட்டே இருப்பான்’ அழுது மிரட்டி இடங் கண்டு கொண்டான் என்று திட்டி விட்டு அழுகின்ற பிள்ளையைக் கவனிக்காது விட்டு விடுவார்கள். மேற்படி சம்பவ விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கின்ற போது நமக்குரிய தேவைகள் நிறைவேற்றப்படாத போது சிறு வயதில் அழுகையினை ஆயுதமாக்கியிருக்கிறோம். ஆனால் பெண்களின் அழுகை கொஞ்சம் வித்தியாசமானது. பாடசாலை படிக்கும் போது சக நண்பர்களின் கேலி – கிண்டல் பேச்சுக்கள் மூலமாக ஒருவன் அழுகின்ற போது, ‘ஏன் பொட்டைப் புள்ள மாதிரி அழுதுகிட்டிருக்காய்’ என்று கேலி பண்ணிச் சக நண்பர்கள் கிண்டல் பண்ணுவார்கள். சில பெண்கள் அழுகை மூலம் தமக்குரிய காரியங்களைச் சாதகமாக நிறைவேற்றவும் அழுகையினை ஆயுதமாகப் பிரயோகிக்கிறார்கள். முதலில் கணவனைக் கொஞ்சிக் குலாவி பக்கத்து வீட்டு கமலா வைத்திருக்கும் நகை மாதிரி எனக்கு வாங்கிக் கொடுக்க முடியுமா என்று கேட்டுப் பார்ப்பார்கள். இல்லையென்றால் அழுது அடம்பண்ணி வாங்கிவிடுவார்கள். இன்றைய கால கட்டத்தில் பெண்களும் ஆண்களுக்குச் சரி சமமாக வேலை செய்யப் பழகினாலும், கணவனிடம் அடிபட்டு, அழுகை மூலம் சாதித்து வாங்குவதில் ஒரு சுகம் இருக்கிறதோ எனக் கருதுகிறார்களோ தெரியவில்லை. இங்கே கணவன் அன்பிற்கு கட்டுப்படுகின்றாரா அல்லது கண்ணீரை ஆயுதமாக்கிப் பெண் வார்த்தைகளைக் கொட்டுகின்ற போது, கண்ணீருக்குக் கட்டுப்படுகின்றாரா? என்பது புரியாத விஷயமாக இருக்கின்றது. இத்தகைய கண்ணீரை நீலிக் கண்ணீர் என்றும் கூறுவார்கள். அலுவலகங்களிலும் சரி, பாடசாலைகளிலும் சரி சக நண்பர்கள் யாருடனாவது சண்டை என்றால் தம்மால் முடிந்த வரை வாய் வீரத்தினைப் பெண்கள் நிலை நாட்டப் பார்ப்பார்கள். இல்லையேல் இறுதி அஸ்திரமான கண்ணீரை ஆயுதமாக்கி ஒரு சில வார்த்தைகள் சொன்னாலே போதும். எதிர்த் தரப்பினர் கப் சிப் ஆகிவிடுவார்கள். பெண்களின் அழுகையானது ஆண்களை ரசிக்க வைக்கிறது என்றும் கூறுகிறார்கள். பெண்களின் கண்ணீர் பற்றி சில சுவாரசியமான தகவல்கள். பெண்களின் கண்ணீர் அவர்களைப் பாதுகாக்கிறது. பெண்களின் கண்ணீரானது ஆண்களைத் தம் வசப்படுத்தவும் பெண்களுக்கு உதவுகிறது என்று கூறுகிறார்கள். பெண்கள் கண்ணீரின் மூலம் தம் பக்க கருத்துக்களை நியாயமாக்குவார்கள். |
Thursday, November 24, 2011
கண்ணீரை ஆயுதமாக்கும் பெண்கள்
நிர்வாணமாக நடிக்க தயார் : “காஞ்சனா” நாயகியின் அதிரடி முடிவு!
தமிழ் சினிமாவுக்குள் எண்டர் ஆகும் கதாநாயகிள் சேலையுடன் தான் வருவார்கள்.. ஓரிரு படங்கள் ஹிட் ஆனவுடன் சேலையை அவிழ்த்து நிர்வாணமாகவும் கவர்சியாகவும் நடிக்கத்தயங்குவதில்லை. அப்படித்தான் தமிழ் திரையுலகில் அண்மையில் பிரபலமாகிக்கொண்டு வரும் ஒரு இளம் அழகிய தமிழ் நடிகை ஆசைப்படுகிறார். ஆம் நிர்வாணம் ஆக நடிக்கத் தயார் என பிரபல தமிழ் பட கதாநாயகி சொல்லியிருப்பது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. ஒரு தமிழ் நடிகை அதுவும் கதாநாயகியாய் நடித்து வருபவர் இப்படி சொன்னது அதிர்ச்சியாயிருக்கிறது.
அவர் லக்ஷ்மி ராய். நடிகர் லாரன்ஸுடன் ‘ காஞ்சனா ‘ படத்திலும் மங்காத்தாவில் அஜித்துடனும் நடித்து வெற்றி கண்ட லட்சுமிராயின் கனவுஇ ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்கவேண்டும் என்பதாம். ஆங்கிலப் படங்கள் என்றால் நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்குமே எனக் கேட்டால்இ அதற்கும் தயார் என்கிறார் லக்ஷ்மி ராய் தயங்காமல்.

இரவில் பூக்கும் ஓக்கிட் மலர் கண்டுபிடிப்பு! (படங்கள் இணைப்பு)
இரவில் மலரும் ஒரே ஒரு வகை ஓக்கிட் மலராக Bulbophyllum என்ற வகை பூ உள்ளதாக தாவரவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகிலுள்ள 25,000 வகை ஓக்கிட் மலர்களில் இந்த இனம் மட்டுமே இரவில் பூக்கின்றது. இந்த மலர் ஏன் இரவில் பூக்கின்றதென்பதற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை. இந்தப் பூ பப்புவா நியூகினி அருகிலுள்ள நியூ பிரிட்டன் என்ற தீவில் டச்சு ஆய்வாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பூக்கள் இரவில் மலர்வது இல்லையெனினும் ஒரு ஓக்கிட் வகைப் பூ இவ்வாறு மலர்வது அதிசயம் என்றே கூறப்படுகிறது.
-
-


இரவில் மலரும் பூக்களில் புகழ்பெற்றதாக இரவில் மலரும் நாகதாளிப் பூ உள்ளது. வருடத்தில் ஒருமுறை பூக்கும் இதன் அளவு ஓர் உணவுத்தட்டின் அளவில் காணப்படும். இது வெளவால்களையும் ஈர்க்கும் தன்மைகொண்டது. ஆனால் இந்த ஓக்கிட்டினால் எது ஈர்க்கப்படும் என்பது தெரியவில்லை என்றும் இதனால் இரவில் திரியும் பூச்சிகள் ஈர்க்கப்படலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Wednesday, November 23, 2011
ரிவியில் நேரடியாக ஒளிபரப்பாகிய ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகும் காட்சிகள்!
ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகும் காட்சிகள் ரிவியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளன
நியூசிலாந்தில் உள்ள ஓக்லாண்ட் எனும் இடத்தில் பாரிய கிறிஸ்மஸ் மரம் நடுகின்ற பணியை ஆற்றி வந்த ஹெலிகொப்டர் ஒன்று எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.
தரையிலிருந்து 25 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த சமயம் மின்சாரக் கேபிள்களில் அதன் சுழலும் சக்கரங்கள் மாட்டிக் கொண்டதால் தான் மேற்படி விபத்து நடந்துள்ளது
வவுனியாவை சேர்ந்த இசை அமைப்பாளர் இசையமைத்துள்ள பாடல் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட பாடல்
![]() இந்தபாடலை வவுனியாவை சேர்ந்த இசை அமைப்பாளர் இசை இளவரசன் கந்தப்புஜெயந்தன் இசையமைத்துள்ளார் பாடலை எழுதியிருப்பவர் பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் அவர்கள் பாடலை பாடியிருப்பவர் |
கந்தப்பு ஜெயந்தன் அவருடன் இணைந்து அவரது சகோதரி ஜெயபிரதா.கந்தப்பு ஜெயந்தன் அவர்களும் பாடலாசிரியர் அஸ்மின் அவர்களும் உருவாக்கிய எங்கோ பிறந்தவளே பாடலும் பல ரசிகர்களின் மனதை ஏற்கனவே கொள்ளை கொண்ட பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
வசதிகள் குறைந்த இடத்தில் இருந்துகொண்டு இப்படி பல இசை தொகுப்புக்களை வெளியிட்டு வரும் இவர்களை லங்காஸ்ரீ இணையத்தளமும் வாழ்த்துகிறது.தென்னித்திய திரைப்படங்களில் நிச்சயம் இவர்களுக்கு சிறந்த களம் கிடைக்கவேண்டும் ..
இவர்களின் இசை வளர்ச்சிக்கு ஆதரவை வழங்குவோம்.
Tuesday, November 22, 2011
சமூக வலை தளங்களில் கொடிகட்டிப்பறக்கும் கொலை வெறி!
![]() சிம்புவை போலவவே, சமீபகாலமாக தனுஷும் பாடல் வரிகள் எழுதி, பாடவும் செய்து வருகிறார். விரைவில் வெளியாக இருக்கும் தன்னுடைய ‘மயக்கம் என்ன’ படத்தில், தனுஷ் ஒரு பாடல் எழுதி பாடியிருந்தார். |
அதேபோல் இப்போது அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில், ஹீரோவாக நடித்து வரும் 3 படத்திலும் ஒரு பாட்டு எழுதி, பாடியும் அசத்தியிருக்கிறார்.
“வொய் திஸ் கொலை வெறி, கொலை வெறி, கொலை வெறி டி…” என்று தொடங்கும் இப்பாடலை தனுஷ் பாட, இடையிடையே ஸ்ருதி ஹாஸனும், ஐஸ்வர்யாவும் குரல் கொடுத்துள்ளனர்.
அனிருத் என்ற புதிய இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார். நேற்று முன்தினம் இந்த ஒரு பாடல் மட்டும் வெளியிடப்பட்டது. இந்தபாடலில் விஷேசம் என்னவென்றால் பாடல் முழுக்க முழுக்க தங்கிலீஷில் எழுதப்பட்டிருப்பதுதான்.
இந்தப் பாட்டு வெளியான கையோடு படு பாப்புலராகிவிட்டது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
யூ ட்யூப், பேஸ்புக் என சமூக வலை தளங்களில் சக்கைப் போடு போடுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
முதல் கட்டமாக இந்த ஒரு பாடலை மட்டும் வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா, மற்ற பாடல்களை அடுத்த விழாவில் வெளியிடுகிறார்.
சார்… உங்களுக்கு ஏன் இந்த கொல வெறி..?!
கின்னஸில் இடம் பிடித்த பூக்கள் நிறைந்த பூலோகசொர்க்கம்!
![]() பூலோகத்தின் சொர்க்கமா இது என்று வியக்கும் அளவுக்கு இருக்கிறது இந்தப் பூங்கா... Al Ain Paradise என்று அழைக்கப்படும் இந்த பூந்தோட்டங்களின் நகரம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைந்துள்ளது. இங்கு 2,426 ஜாடிகளில் பூக்கன்றுகள் தொங்குகின்றன. இரண்டு தடவைகள் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது உண்மையில் கண்ணைக் கவரும் பல்வேறு நிறங்களில் அழகழகாக பூத்துக் குலுங்குகின்றன பூக்கள். இது உண்மையில் ஒரு சொர்க்கலோகம் தான். ![]() ![]() ![]() ![]() |
கரையோரத்தில் உள்ள சாலை ஒன்று கடலுக்குள் விழும் காட்சி
![]() வீழ்ந்த 800 அடிப் பகுதியானது பல மாதங்களாகவே போக்குவரத்திற்கு மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்பகுதியால் பயணிக்க வேண்டாம் என எச்சரிக்கைப் பலகைகளும் போடப்பட்டிருந்தன. இந்த சாலையை மீண்டும் சரிசெய்வது சாத்தியமில்லை என்றும் புதிய பாதை வேறு இடத்தில் கட்டப்பட வேண்டும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ![]() இந்த நிகழ்வின் போது எவரும் காயமடையவில்லை. எனினும் இதனைக் காண்பதற்கு மக்கள் கூடுவதால் காவலுக்காக இரவும் பகலும் காவல் துறையினர் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. ![]() இந்த மண்சரிவு மிகவும் படிப்படியாக ஏற்பட்டு வந்ததாகவும் வீதி அங்குலம் அங்குலமாக நகர்ந்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. அதன்பின்னர் அதில் வெடிப்புக்கள் ஏற்பட்டதாகவும் நாளாந்தம் 4 அங்குலப்படி விரிந்து பாதையை உடைத்தாகவும் பொறியியலாளர்கள் குறிப்பிட்டனர். ![]() இப்பாதைக்கு அருகிலுள்ள மக்களின் வீடுகளையும் இந்த மண்சரிவு பாதிக்கலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதற்கான காரணத்தினைப் பொறியியலாளர்கள் ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ![]() ![]() ![]() |
ஸ்டீவை ஞாபகப்படுத்தும் அவரது ரசிகர்கள்
![]() ஸ்டீவின் ரசிகர்கள் அவரை ஞாபகப்படுத்தும் வகையில் அவரது புகைப்படங்களையும், ஓவியங்களையும் வடிவமைத்து இணையதளங்களில் உலாவவிட்டுள்ளனர். அவர் மறைந்தாலும் அவரது கண்டுபிடிப்புகள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கின்றன. ![]() ![]() ![]() ![]() |
செயற்கைக் கால்களோடு கால்பந்தாட்டம் விளையாடும் சிறுமி |
[ Monday, 21 November 2011, 05:43.26 AM. ] |
![]() இந்த செயற்கை கால்கள் அசையும் மூட்டுக்களைக் கொண்டிருப்பதால் எலில் உற்சாகத்துடன் கால்பந்து விளையாடுகிறாள். மேலும் சக மாணவிகளுக்கு கால்பந்தாட்டப் பயிற்சியும் அளிக்கிறாள். 2005ம் ஆண்டு யூலை மாதம் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எல்லி கேலிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை தொடங்கிய சில மணி நேரத்தில் அவளது இதயம் நின்றுவிட்டது.உடனே அவளின் தாயும் தந்தையும் கதறி அழுதனர். அவள் இறந்து விட்டாளோ என்று நினைத்த வேளையில் அவள் இதயம் துடிக்கத் தொடங்கியது. |
அடுத்த நான்கு நாட்களில் காலும் கையும் கருத்துவிட்டது. எனவே அவற்றை உடலிலிருந்து நீக்கிவிட்டனர். பின்பு சாதாரண செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன.

தினமும் அவற்றை 20 நிமிடம் பொருத்தி வலியோடு நடந்து பார்த்தாள். டிசம்பர் 2006ல் அசையும் மூட்டுக்களைக் கொண்ட செயற்கை கால் எல்லிக்குப் பொருத்தப்பட்டது.
பின்பு 2009 ஏப்ரல் மாதத்தில் கார்பன் இழைகள் கொண்ட எடை குறைவான மற்றும் விளையாடுவதற்கு வசதியான செயற்கைக் கால் பொருத்தப்பட்டது.

இதன் பின்பு இவள் மற்ற சிறுவர், சிறுமியரைப் போல் ஓடியாடி விளையாட முயன்றாள்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு தன் பள்ளிக்கான கால்பந்தாட்ட விளையாட்டுக் குழுவில் சேர்ந்து மற்றவர்களைப் போல அற்புதமாக விளையாடுகிறாள். சக மாணவிகளுக்கு விளையாடப் பயிற்சியளிக்கிறாள்.
ஆர்செனல் என்ற கால்பந்தாட்ட குழு மீது இவளுக்கு ஆர்வம் அதிகம். தன் தந்தையோடு உட்கார்ந்து தொலைக்காட்சியில் கால்பந்தாட்டத்தை ரசித்து பார்ப்பாள். இப்போது நோய்த் தாக்குதலின் சவால்களைச் சந்தித்த சாதனையாளராகி விட்டாள்
Monday, November 21, 2011
பெண்ணாய் மாறும் ஆண் -நம்ப முடியவில்லை -பார்தால் வியப்பீர்கள்(வீடியோ இணைப்பு)

அசத்தல் பெண் போல மார்பகங்கள் மற்றும் பெண் உறுப்புக்கள் மாற்ற படும் திகில் காணொளி .. காட்சி பார்த்தாலே நீங்களும் வியப்பீர்கள் ..!
Sunday, November 20, 2011
உலகின் அதிகூடிய வயதில் அப்பாவான 95 வயது தாத்தா!(படம் இணைப்பு)
WRITTEN BY ADMIN ON NOVEMBER 20TH, 2011 | NO COMMENTS

இந்த தாத்தாவின் திறமையைப் பார்த்தீர்களா? 95 வயதிலும் இளமைத் துள்ளலோடு இருக்கிறார் இந்த தாத்தா. உலகிலேயே மிகக் கூடிய வயதில் அப்பாவாகிய பெருமை Ramjeet Raghav என்ற இவரையே சாரும். கடந்த ஆண்டு 94 ஆவது வயதில் தந்தையாகியிருக்கிறார் இவர். இவரது மனைவியின் பெயர் சகுந்தலா.. அவருக்கு 58 வயது. Vikramjeet என்ற அவரது மகனுக்கு இப்போது ஒரு வயது தான் ஆகின்றது. முன்னாள் மல்யுத்த வீரரான Ramjeet Raghav கருத்துத் தெரிவிக்கையில்,
-

நான் இப்போது ஒரு இரவில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் செஸ்சில் ஈடுபடுவேன். சில நேரம் பகலிலும் செக்ஸ் வைத்துக் கொள்வோம். ஆனால் இப்பொழுது எங்களுக்கு மகன் பிறந்து விட்டான். அதனால் எல்லா நேரமும் செக்ஸ் வைத்துக் கொள்வது சாத்தியமில்லை என்று மனம் திறந்த வாக்கு மூலம் கொடுத்துள்ளார் இந்த தாத்தா. நான் இப்பவும் வயல்களில் வேலை பார்க்கிறேன். நல்ல ஆரோக்கியமாகவும் இருக்கிறேன்.
-

நான் இப்போது ஒரு இரவில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் செஸ்சில் ஈடுபடுவேன். சில நேரம் பகலிலும் செக்ஸ் வைத்துக் கொள்வோம். ஆனால் இப்பொழுது எங்களுக்கு மகன் பிறந்து விட்டான். அதனால் எல்லா நேரமும் செக்ஸ் வைத்துக் கொள்வது சாத்தியமில்லை என்று மனம் திறந்த வாக்கு மூலம் கொடுத்துள்ளார் இந்த தாத்தா. நான் இப்பவும் வயல்களில் வேலை பார்க்கிறேன். நல்ல ஆரோக்கியமாகவும் இருக்கிறேன்.
Friday, November 18, 2011
இளவரசர் வில்லியமின் மனைவி கர்ப்பம்
![]() இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியின் மகன் இளவரசர் வில்லியம்- கேத் மிடில்டன் திருமணம் கடந்த ஏப்ரல் மாதம் 29ம் திகதி கோலாகலமாக நடந்தது. தற்போது இவர்கள் கேம்பிரிட்ஜ் அரண்மனையில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் கேத் மிடில்டன் 6 வாரம் கர்ப்பமாக இருப்பதாக லண்டனில் இருந்து வெளிவரும் இன்டச் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அக்குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என இளவரசர் வில்லியம் ஆசைப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பே கேத் மிடில்டன் கர்ப்பம் அடைந்திருப்பதாக தகவல் வெளியானது. அப்போது அது வதந்தி என கூறப்பட்டது நினைவிருக்கலாம். |
Wednesday, November 16, 2011
பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் உலக அழகி ஐஸ்வர்யா ராய்!!
நடிகை ஐஸ்வர்யா ராயுக்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்தது. உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் பச்சனின் குடும்ப வாரிசை ஐஸ்வர்யா ராய் பெற்று எடுத்தார்.
குழந்தையும் தாயும் நலமாக உள்ளார் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளார்கள். பிரசவத்திற்காக திங்கள் கிழமை இரவு மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
அப்பாவான அபிஷேக் பச்சனும், தாத்தாவான அமிதாப் பச்சனும் இன்று காலை இந்த நற்செய்தியை ட்விட்டரில் தெரிவித்ததன் மூலம் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.
இந்த செய்தி கேட்டவுடன் ஐஸ்வர்யா ராய் குடும்பத்தினர் தங்களது மகிழ்ச்சியை உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டு உள்ளார்கள். அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராயும் 2007 ஏப்ரல் 20 -ம் திகதி அன்று தம்பதிகள் ஆனார்கள்.
வேற்றுக் கிரகவாசிகளால் கர்ப்பம் அடைந்த ஆண்!! நம்பினால் நம்புங்கள். (வீடியோ இணைப்பு)
ஆண்கள் கர்ப்பம் அடைவார்களா? கர்ப்பம் அடைந்து இருக்கின்றார் என்று சொல்லி வயிற்றைக் காண்பிக்கின்றார் இந்த மனிதர்.
அதிலும் மிகப் பெரிய அதிசயம் என்னவென்றால் இக்கர்ப்பத்துக்குக் காரணம் வேற்றுக் கிரகவாசிகள் என்கின்றார். இவருடன் வேற்றுக் கிரகவாசிகள் உடலுறவு வைத்துக் கொண்டார்களாம்.
Monday, November 14, 2011
புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்றுவதற்கு
![]() உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும் உங்களின் வலதுபுறம் அந்த புகைப்படத்தை அட்ஜஸ்ட் செய்வதற்கான டூல்கள் -பிரஷ்கள் இருக்கும். அதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி தேவையான அளவினை வைத்துக் கொள்ளலாம். தரவிறக்க சுட்டி |
உன் விழியும் என் விழியும் சந்தித்த நாள் .......... கவிஞர்:டீபா பிரசுரித்த திகதி:14, November 2011 Views 418 என் வாழ்வில் மறக்கமுடியாத நாள்! அன்று தான் உன்னை நான் நேரில் சந்தித்த நாள்! உன்னை நான் சந்தித்த அந்த நொடி இன்னும் என் கண்முன்னே நிற்கிறது! எனக்குள் காதல் என்ற அனுபவத்தை முதன் முதலில் கொடுத்த உன்னை நேரில் காண நான் ஏங்கி தவமிருந்த அந்த நொடிப்பொழுதை நான் சந்தித்தேன்! உன்னை கண்டதும் என் மனதில் வசந்தம் வீசுவதை உணர்ந்தேன்! நாம் எத்தனை பகல் எத்தனை இரவுகள் மணிகணக்காய் பேசி நம் உணர்வுகளை பரிமாறிக்கொண்டு காதலராய் வாழ்ந்து கொண்டு இருந்தாலும் உன்னை நேரில் கண்டதும் என்னால் உன் விழியை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் திணறினேன்!. அன்று தான் என் வாழ்வில் நான் இதுவரை அடைந்திராத எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தேன் ! அந்த மகிழ்ச்சி எப்படி இருந்தது என்றால் பாலைவனத்தில் கோடிகணக்கான மலர்கள் பூத்து குலுங்கியது போலிருந்தது ! உன்னுடைய அன்பு என் இறுதி மூச்சு வரை தொடர வேண்டுமென்று உன்னிடம் நான் கையேந்தி நிற்கிறேன் தருவாயா உன் அன்பை காதலை பாசத்தை
![]() |
அன்று தான் உன்னை
நான் நேரில் சந்தித்த நாள்!
உன்னை நான் சந்தித்த
அந்த நொடி இன்னும்
என் கண்முன்னே நிற்கிறது!
எனக்குள் காதல் என்ற
அனுபவத்தை முதன் முதலில்
கொடுத்த உன்னை நேரில் காண
நான் ஏங்கி தவமிருந்த அந்த
நொடிப்பொழுதை நான் சந்தித்தேன்!
உன்னை கண்டதும் என் மனதில்
வசந்தம் வீசுவதை உணர்ந்தேன்!
நாம் எத்தனை பகல் எத்தனை
இரவுகள் மணிகணக்காய் பேசி
நம் உணர்வுகளை பரிமாறிக்கொண்டு
காதலராய் வாழ்ந்து கொண்டு இருந்தாலும்
உன்னை நேரில் கண்டதும் என்னால்
உன் விழியை நேருக்கு நேர்
சந்திக்க முடியாமல் திணறினேன்!.
அன்று தான் என் வாழ்வில்
நான் இதுவரை அடைந்திராத
எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தேன் !
அந்த மகிழ்ச்சி எப்படி இருந்தது என்றால்
பாலைவனத்தில் கோடிகணக்கான
மலர்கள் பூத்து குலுங்கியது போலிருந்தது !
உன்னுடைய அன்பு
என் இறுதி மூச்சு வரை
தொடர வேண்டுமென்று
உன்னிடம் நான் கையேந்தி நிற்கிறேன்
தருவாயா உன் அன்பை காதலை பாசத்தை!
புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்துகிறது ஏசர்

டேப்லெட் கணினி துறை நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக, டேப்லெட்டுகளின் விற்பனை கணினி மற்றும் லேப்டாப்புகளின் விற்பனையை மிக விரைவில் விஞ்சிவிடும் என கருதப்படுகிறது.
இந்த துறையில் ஏராளமான நிறுவனங்கள் அதிகமாக முதலீடு செய்து அதன் மூலம் மிகத் தரமான புதிய டேப்லெட்டுகளை நாள்தோறும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் ஏசர் நிறுவனமும் தனது புதிய டேப்லெட்டைக் களமிறக்குகிறது.
ஏசர் எ200 டேப் என்ற பெயரில் இந்த புதிய டேப்லெட்டை ஏசர் அறிமுகப்படுத்துகிறது. இந்த டேப்லெட் ப்ளூடூத் ஸ்பெஷல் இன்ட்ரஸ்ட் குரூப்பில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் தரச் சான்றிதழையும் பெற்றுள்ளது. இந்த டேப்பின் படங்கள் இப்போதுதான் இணையதளத்தில் வந்திருக்கின்றன. ஆனால் அதைப் பற்றிய வேறு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த ஏசர் எ200 ஏசரின் எ-100 மற்றும் எ500க்கும் இடையில் வரும் நடுத்தர ரகத்தை சேர்ந்ததாக இருக்கும்.
ப்ளூடூத் ஸ்பெஷல் இன்டரஸ்ட் குரூப் இணையதளத்திற்கு அறிவித்த அறிக்கையின் படி இந்த சிறியதாக இருக்கும்.
சாதாரண அளவில் வருகிற ஒரு பத்திரிக்கையின் அளவை விட சிறியதாக இருக்கும். இதன் திரையின் அளவு 7 முதல் 8.9 இன்ச்சாக இருக்கும். ஆனால், திரை 10 இன்ச்சாக கூட இருக்கும் என்று கருதப்படுகிறது. இதன் படங்களைப் பார்க்கும் போது இந்த டேப்லெட்டின் திறையின் அளவு 10 இன்ச்சுக்கு குறைவாக இருப்பது போல் தெரிகிறது.
ஏசர் எ200 டேப் மிகக் குறைவான தேவையான பட்டன்களை மட்டுமே கொண்டுள்ளது. பார்ப்பதற்கு நெளிவு சுழிவுகளுடன் மிக அழகாக இருக்கிறது. அதாவது சாம்சங்கின் கேலக்ஸி டேப்லெட்டை போல் இருக்கிறது.
ஏசர் எ200 எந்த ஆன்ட்ராய்டு வெர்சனில் இயங்கும் என தெரியவில்லை. ஆன்ட்ராய்டின் 4.0 ஐஸ்-க்ரீம் சான்ட்விஜ் வெர்சன் அல்லது ஆன்ட்ராய்டு 3.2 ஹனிகோம்ப் வெர்சனில் இயங்கும் எனத் தெரிகிறது.
ஏசர் எ200 டேப் பேக்ரா 3 க்வாட் கோர் ப்ராசஸரைக் கொண்டிருக்கும். ப்ளூடூத் ஸ்பெஷல் இன்டரஸ்ட் குரூப் கொடுத்த தகவலின் படி இந்த டிவைஸ் புதிய டச் அனுபவத்தை வழங்கும். அதாவது இது சூப்பர் சென்சிட்டிவ் கப்பாசிட்டிவ் அல்லது அமோலெட் தொடுதிரை கொண்டு வரும் என்று தெரிகிறது.
எ500 2மெகா பிக்சல் கொண்ட முகப்பு கேமராவையும் 5 மெகா பிக்சல் கொண்ட ரியர் கேமராவையும் வழங்கியது. அதுபோல் 32ஜிபி இன்டர்னல் மெமரியையும், 1ஜிபி ரேமையும் மற்றும் 64ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய மெமரி வசதியையும் வழங்கியது. அதே போல் ஏசர் எ200ம் அந்த வசதிகளை வழங்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இதன் விலை எ500ஐ விட குறைவாக இருக்கும்.
அனைவரின் கவனத்தை ஈர்த்த விளம்பரங்கள்
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
குழந்தைகளுக்கென ஒரு விசேட உலாவி
![]() அவர்களின் அறிவாற்றலைப் பெருக்க இது உதவுகின்றபோதிலும் இணையத்தில் தீமைகளும் இருக்கவே செய்கின்றன. பொதுவாக தமது குழந்தைகள் இணையத்துடன் இணைந்து இருக்கும் போது பெற்றோர் ஆபாச தளங்கள், தேவையில்லாத வன்முறைத் தளங்கள், செட்டிங் போன்றவற்றில் சென்று விடக்கூடாது என அவர்கள் அதிக அக்கறை கொள்வார்கள். எனினும் அவர்களால் தமது குழந்தைகளை எந்நேரமும் கண்காணித்துக்கொண்டு இருக்க முடிவதில்லை. எனவே தங்களது குழந்தைகளின் பாதுகாப்பான இணைய உபயோகத்திற்கு உறுதி அளிக்கும் உலாவியொன்றினைப்பற்றியதே இச்செய்தி. குழந்தைகளுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள இவ்வுலாவியின் பெயர் Kidzui. இதை உருவாக்கியவர்கள் பல மில்லியன் தளங்கள், வீடியோப் படங்கள், ஒளிப்படங்கள் போன்றவற்றை இணைத்திருக்கிறார்கள். அதுவும் நிர்வாகிகளால் பலமுறை சோதனை செய்யப்பட்டு பாதுகாப்பானவை என்ற பின்னரே இதில் இணைக்கப்பட்டிருக்கின்றது. இதில் குழந்தைகள் பாதுகாப்பான காணொளிகளை மட்டுமே பார்வையிடமுடியும். மேலும் ஏராளமான விளையாட்டுகளும் இதில் உள்ளன. இதில் முதலில் பெற்றோர்கள் தங்களது கணக்கை உருவாக்கி குழந்தைகளைக் கட்டுப்படுத்துவதற்கான (Parental Controls) அமைப்பை செய்து கொள்ள முடியும். இதன்படி உங்கள் குழந்தைகள் இவ்வுலாவியை மட்டுமே பயன்படுத்தக்கூடியவாறும், கணனியில் வேறு எதனையும் செய்யமுடியாதவாறும் செட்டிங்களை மேற்கொள்ளமுடியும். பாதுகாப்பான இவ்வுலாவியை நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கென தரவிறக்கம் செய்துகொள்ளுங்களேன்! தரவிறக்கம் செய்ய: http://www.kidzui.com/download |
Subscribe to:
Posts (Atom)