தன்னுடைய ரௌத்திரம் படத்தின் பாடல்களை இயக்குனர் ஷங்கர், விஜய் மற்றும் இலியானா ஆகியோரை வைத்து வெளியிட ஜீவா தீர்மானித்திருந்தார். அதற்கான அழைப்பினையும் அவர்களுக்கு விடுத்திருந்தார்.
ஜீவாவின் அழைப்பை ஏற்று தாங்கள் வந்து 'ரௌத்திரம்' திரைப்படத்தின் பாடல்களை வெளியிட்டு வைப்பதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர். இருப்பினும் நண்பன் படத்தின் பட்பிடிப்புக்கள் இறுதி நேரத்தில் ரத்தானதால் அவர்களால் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை.
அவர்களுக்காக நீண்ட நேரம் காத்திருந்த ஜீவா, பின்னர் கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்யா மற்றும் ஜெயம் ரவி ஆகியோரை வைத்து பாடல் சீடியினை வெளியிட்டார்.
பாடல் வெளியீட்டு விழாவுக்கு கடைசிநேரத்தில் வராமல் போனதால் நடிகர் விஜய் மற்றும் டைரக்டர் ஷங்கர் ஆகியோர் ஜீவாவிடமும் அவரது தந்தையும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.பி.சௌத்ரியிடமும் மன்னிப்பு கேட்டுள்ளனர். இருப்பினும் இலியானா பற்றி தகவல் ஏதும் இல்லை



No comments:
Post a Comment