Wednesday, July 27, 2011

பிரம்மாண்ட சுறாவிடம் இருந்து உயிர் தப்பிய நீச்சல் வீரர்

சுறாக்களில் பிரமாண்டமானது "திமிங்கல சுறா". சுமார் 40 அடி நீளம் வரை இருக்கும். எடை சுமார் 25 டன் முதல் 35 டன் வரை இருக்கும்.

வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள முஜரஸ் பகுதிக்கு திமிங்கல சுறாக்கள் ஜூன், ஜூலை மாதங்களில் கூட்டம் கூட்டமாக வரும். அங்குள்ள சிறிய மீன்களை மொத்தமாக விழுங்கும். வேட்டை முடிந்த பிறகு, மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு சென்றுவிடும்.

சமீபத்தில் 600க்கும் அதிகமான திமிங்கல சுறாக்கள் முஜரஸ் பகுதிக்கு வந்தன. இந்த நிகழ்வுக்காக காத்திருந்த நீச்சல் வீரர்கள், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் பலர் முன் அனுமதி பெற்று முஜரஸ் பகுதிக்கு வந்திருந்தனர்.

சுறாக்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள் குறித்து விரிவான ஆய்வும் மேற்கொண்டனர். அமெரிக்காவை சேர்ந்த நீச்சல் சாகச வீரர் ஹேண்ட்லர்(49) என்பவரும் இந்த டீமில் இருந்தார். சுறாவின் வாயில் இருந்து நூலிழையில் தப்பிய அனுபவம் பற்றி அவர் விளக்குகிறார்.

ராட்சத உருவம் என்றாலும் திமிங்கல சுறாக்கள் மென்மையானவை. மெதுவாகத்தான் செல்லும். மணிக்கு 5 கி.மீ.தான் அதன் அதிகபட்ச வேகம். கொஞ்சம் பழக்கினால் நண்பன் போலவே நடந்துகொள்ளும். ஆனாலும் தண்ணீருக்கு அடியில் அதன் உருவம் நம்மை மிரள வைக்கும்.

இதுகுறித்து ஹேண்ட்லர் என்பவர் கூறியதாவது: ஆராய்ச்சிக்காக நான் நீந்திக் கொண்டிருந்த போது எதேச்சையாக திரும்பி பார்த்தேன். வாயை சுமார் 5 அடி அகலத்துக்கு திறந்து வைத்தபடி திமிங்கல சுறா நெருங்கி வந்து கொண்டிருந்தது.

நான் சற்று கவனிக்காமல் இருந்திருந்தாலும் அதன் வாய்க்குள் போயிருப்பேன். தன் உணவு தவிர வேறு பொருட்களை சுறா உள்ளே அனுமதிக்காது. உடனே வாயை மூடி என்னை வெளியேற்றியிருக்கும்.

அதன் வாய்க்குள் சின்னச் சின்னதாக 350 வரிசையில் பற்கள் இருக்கும். சுறா சற்று வாயை மூடித் திறந்தாலும் காயம் அதிகம் பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக தப்பினேன்.

விஜய் படப்பிடிப்பில் பெரும் ரகளை... கேரவனை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்

சென்னை: நடிகர் விஜய்யின் நண்பன் படப்பிடிப்பில் ரசிகர்கள் திடீரென்று புகுந்த ரகளை செய்தனர். கேரவனை அடித்து நொறுக்கினர். இந்தியில் ஹிட்டான அமீர்கானின் 3 இடியட்ஸ் படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் தயராகிறது.

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கின்றனர். எந்திரனுக்குப் பிறகு ஷங்கர் இயக்கும் படம் இது. சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு சில தினங்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்றைய படப்பிடிப்பின்போது 200 பேர் திடீரென அந்தக் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டனர்.

அவர்கள் விஜய் உள்ளிட்ட நடிகர்களை பார்க்க முண்டியடித்தனர். நிலைமையை உணர்ந்து விஜய், ஜீவா போன்றோர் ரசிகர்களைச் சந்தித்து கையசைத்து விட்டுச் சென்றார்கள். ஆனால் கூட்டத்தினர் திரும்பிச் செல்லவில்லை. அவர்கள் படப்பிடிப்பு அரங்குக்குள் நுழைந்து நடிகர்களின் கைகளை பிடித்து இழுக்க துவங்கினர்.

இதனால் படப்பிடிப்பை ஷங்கரால் நடத்த இயலவில்லை. ரசிகர்களிடம் கலைந்து செல்லும்படி வேண்டினார். அவர்கள் போகவில்லை. அரங்குகளை சேதப்படுத்தி ரகளை செய்தனர். கேரவன் கண்ணாடிகளையும் உடைக்க ஆரம்பித்தனர். அவர்களின் இந்த நடவடிக்கையால் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சியானார்கள்.

உடனடியாக போலீசார் வரவழைக்கப்பட்டனர். பின்னர் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை வெளியேற்றினர். இந்த சம்பவத்துக்கு பிறகு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

நாடுகளுக்கிடையே உள்ள எல்லைகள்

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு எல்லை கோடு உள்ளது. அந்த எல்லை கோட்டை கடந்தால் வேறு நாட்டிற்கு சென்று விடுவோம். அப்படி உலகில் உள்ள சில நாடுகளின் எல்லை பகுதிகள் இதோ உங்களுக்காக.

LAOS, MYANMAR & THAILAND

GERMANY & CZECH

SPAIN & FRANCE

INDIA & PAKISTAN

PAKISTAN & CHINA

US & CUBA

ITALIA & FRANCE

SOUTH & NORTH KOREA

NEPAL & INDIA

ENGLAND & SCOTLAND

ஜீவாவிடம் மன்னிப்பு கேட்ட விஜய்... (படங்கள் இணைப்பு)

ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'நண்பன்'. இதேவேளை, ஜீவா கதாநாயகனாக நடித்து அண்மையில் வெளிவரவுள்ள திரைப்படம் 'ரௌத்திரம்'. இந்தப் படத்தின் பாடல் வெளியீடு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

தன்னுடைய ரௌத்திரம் படத்தின் பாடல்களை இயக்குனர் ஷங்கர், விஜய் மற்றும் இலியானா ஆகியோரை வைத்து வெளியிட ஜீவா தீர்மானித்திருந்தார். அதற்கான அழைப்பினையும் அவர்களுக்கு விடுத்திருந்தார்.

ஜீவாவின் அழைப்பை ஏற்று தாங்கள் வந்து 'ரௌத்திரம்' திரைப்படத்தின் பாடல்களை வெளியிட்டு வைப்பதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர். இருப்பினும் நண்பன் படத்தின் பட்பிடிப்புக்கள் இறுதி நேரத்தில் ரத்தானதால் அவர்களால் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை.

அவர்களுக்காக நீண்ட நேரம் காத்திருந்த ஜீவா, பின்னர் கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்யா மற்றும் ஜெயம் ரவி ஆகியோரை வைத்து பாடல் சீடியினை வெளியிட்டார்.

பாடல் வெளியீட்டு விழாவுக்கு கடைசிநேரத்தில் வராமல் போனதால் நடிகர் விஜய் மற்றும் டைரக்டர் ஷங்கர் ஆகியோர் ஜீவாவிடமும் அவரது தந்தையும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.பி.சௌத்ரியிடமும் மன்னிப்பு கேட்டுள்ளனர். இருப்பினும் இலியானா பற்றி தகவல் ஏதும் இல்லை





Sunday, July 24, 2011

பாம்புகளை மாலையாக அணிந்த யாழ் மாணவர்கள் (படங்கள் இணைப்பு)

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் இலங்கையில் யாழ்ப்பாண மாணவர்கள் பாம்புகளை கைகளில் பிடித்தும் - கழுத்தில் சுற்றிப் போட்டும் வைத்திருந்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றது. தெகிவளையில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவின் ஏற்பாட்டில் யாழ். மகாஜனா கல்லூரியில் பாம்புகள் தொடர்பான விழிப்புணர்வூட்டல் பிரசாரம் ஒன்று 18 ஆம் திகதி இடம்பெற்றது.

துறை சார்ந்த அதிகாரிகள் பாம்புகளை கொண்டு வந்து மாணவர்களுக்கு காண்பித்தனர். பாம்புகள் மீதான பயத்தைப் போக்குகின்றமைக்காக தைரியம் கொடுக்கின்ற வார்த்தைகள் பேசினார். பாம்புகளுடன் நட்புடன் பழக வேண்டும் என்றார்கள். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் உயிரியல் பல்லினத்துவ பாதுகாப்புக்கான கல்வித் திட்டத்தின் கீழ் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது.








Friday, July 22, 2011

சிலாபத்தில் குழாய்க் கிணற்றிலிருந்து எரிவாயு வெளியேற்றம்!

சிலாபம், முன்னேஸ்வரம் பௌத்த விகாரையில் தண்ணீருக்காக தோண்டப்பட்ட குழாய்க் கிணற்றிலிருந்து ஒரு வகை எரிவாயு வெளியேறிவருகிறது.

முதலில் குழாய்க் கிணறு தோண்டப்பட்ட போது நீருக்குள்ளிருந்து ஒருவகை வாயு வெளியேறுவது கண்டுபிடிக்கப்பட்டது. சுலபமாக தீப்பற்றிக் கொள் ளக்கூடியதாக இந்த வாயு இருந்ததுடன் இப்பகுதியில் மற்றுமொரு குழாய்க் கிணறும் தோண்டப்பட்டது. அதிலிருந்தும் இந்த வகையான வாயு வெளியேறியது.

முதலில் மீதேன் வாயு என ஆய்வாளர்கள் குறிப்பிட்ட போதும் பின்னர் அதனை மறுத்துள்ளனர். சுமார் 200 மீற்றர் தொலைவிற்கு குழாய் மூலம் வாயுவை கொண்டு சென்று பரிசோதித்த போதும் மிக எளிதாக தீப்பற்றிக் கொண்டது. இப்பகுதியில் மேலும் 2 குழாய் கிணறுகளை தோண்டி ஆய்வு செய்யும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விசேட குழுவொன்று இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளது

Wednesday, July 20, 2011

கிளிநொச்சியில் புலிகளின் ஓடுதளத்தில் தரையிறங்கிய சிறிலங்கா விமானப்படையின் முதல் விமானம்

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் வான்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஓடுபாதையைப் புனரமைத்துள்ள சிறிலங்கா விமானப்படை நேற்றுத் தொடங்கம் அந்த ஓடுபாதையில் விமானங்களை தரையிறக்கத் தொடங்கியுள்ளது.


புதிதாக அமைக்கப்பட்ட இந்த ஓடுபாதையில் சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் வைஸ் மார்சல் ஹர்ச குணதிலக பயணம் செய்த வை-12 போக்குவரத்து விமானத்தை விமானிகள் விங் கொமாண்டர் சரிக அரநாயக்க, ஸ்குவாட்ரன் லீடர் தர்சன டயஸ் ஆகியோர் நேற்றுக்காலை தரையிறக்கினர்.

விடுதலைப் புலிகளால் பயிற்சிக்காக தயார்படுத்தப்பட்ட சிறிய ஓடுபாதையே இது என்று சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் அன்றூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த ஓடுபாதை வை 12 போன்ற இலகு ரக விமானங்களும், அனைத்து வகை உலங்குவானூர்திகளும் தரையிறங்கும் வகையில் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

1000 மீற்றர் நீளம் கொண்ட இந்த ஓடுபாதை ஏ-9 வீதிக்கு கிழக்குப் பக்கமாக 7கி.மீ தொலைவில் கிளிநொச்சி படைத்தலைமையகத்தில் இருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

கிளிநொச்சி விமான ஓடுதளம் என்று இந்த ஓடுபாதைக்கு பெயரிடப்பட்டுள்ளது.

இரணைமடு ஓடுபாதைக்கு வடக்கேயுள்ள இந்த விமான ஒடுபாதைப் பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பின்னர், இரத்மலானையில் இருந்து போக்குவரத்து விமானங்களை இயக்க சிறிலங்கா விமானப்படை திட்டமிட்டுள்ளது.

சிறிலங்கா விமானப்படையின் ஹெலி ருவர்ஸ் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ள வர்த்தக விமானப் போக்குவரத்துக்கு ஒரு வழிக்கட்டணமாக பயணி ஒருவரிடம் இருந்து 7500 ரூபா அறிவிடப்படவுள்ளது.

முதல்முதலாகத் தரையிறங்கிய விமானத்தை கிளிநொச்சிப் படைத்தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தவும், இரணைமடு விமான ஓடுதள கட்டளை அதிகாரி விங்கொமாண்டர் ஹெய்லி ரூபசிங்கவும் வரவேற்றனர்.

அதேவேளை புலிகளால் அமைக்கப்பட்ட மற்றொரு விமான ஓடுதளமான இரணைமடு ஓடுபாதையும் சிறிலங்கா விமானப்படையால் புனரமைக்கப்பட்டு வருவதுடன், வர்த்தக, இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இரணைமடு ஓடுதளம் பெரிய விமானங்களைத் தரையிறக்கும் வசதிகளைக் கொண்டதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாலிபம் ஒருவனின் கண்ணீர் கதை -பார்த்தல் தமிழா நீயும் அழுவாய் (வீடியோ இணைப்பு)

தாயாய் தந்தையை மாறிய இந்த வாலிபனின் கண்ணீர் காதையினை கேளுங்கள்.
 இதை பார்த்து பலமுறை நாம் அழுதோம் .இதயம் உடைந்தது .

சமுகத்தில் இவ்வாறான தாய் தந்தையரை எண்ணி வெட்க பட்டோம் வேதனை அடைந்தோம்.

தனது சுதந்திரங்களை தொலைத்து விட்டு விட்டு சித்தியின் பிள்ளைகளை

தம்பிகளாய் பார்க்கும் இந்த அண்ணன் போன்ற பாச பிணைப்பு உறவு

யாருக்கு இருக்கும் ..?

உன் பாதங்கள் பணித்து வணங்குகின்றோம் தோழா…

கையில்லாத பெண் விமானம் ஒட்டி சாகசம் (வீடியோ இணைப்பு)

நம்முடைய தளத்தில் கையில்லாத மனிதர்கள் செய்த பல வீதமான செயல்களை பார்த்திருக்கிறோம். அதே போல கையில்லாமல் விமானம் ஓட்டிய பெண்ணை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.








Tuesday, July 19, 2011

கொடூரமான சாலை விபத்து (படங்கள் இணைப்பு)

கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட கொடூரமான விபத்து காரில் பயணம் செய்தவர்கள் உடல் நசிங்கி உயிரிழந்தனர்.













Friday, July 15, 2011

அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியினர் இலங்கை தொடரை புறக்கணிக்கும் அபாயம்: முதளிதரன் எதிர்ப்பு

 இலங்கை போர் தொடர்பான "கொலைக்களம்" வீடியோ காரணமாக, அவுஸ்திரேலிய வீரர்கள் இலங்கை தொடரை புறக்கணிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வரும் ஓகஸ்ட் மாதம், இலங்கை செல்லும் அவுஸ்திரேலிய அணி இரண்டு ”டுவென்டி 20”, ஐந்து ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதனிடையே இலங்கை போரில் நடந்த படுகொலை தொடர்பாக, இங்கிலாந்தின் ”சானல் 4”  தொலைக்காட்சி வெளியிட்ட குறுந்தகடு உலகம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் இங்கிலாந்தில், இலங்கை அணி பங்கேற்ற போட்டிகளின் போது, தமிழ் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இது அவுஸ்திரேலியாவிலும் எதிரொலித்துள்ளது. இதையடுத்து அங்குள்ள மக்களிடம் ”தி ஏஜ்” நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 81 சதவீதம் பேர், அவுஸ்திரேலிய அணி இலங்கை செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். அதாவது 3,527 பேரில் 2,856 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மூத்த வீரர்கள் உட்பட சிலர், இலங்கை செல்ல விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் முரளிதரன் கூறுகையில், விளையாட்டு, அரசியல் இரண்டும் வேறு. அவுஸ்திரேலிய அணி ஏற்கனவே பாகிஸ்தான், ஜிம்பாப்வேக்கு செல்லாது. வீரர்கள் விருப்பத்துக்கு இணங்க, இலங்கைக்கும் செல்ல மறுத்து, ஒருசில நாடுகளில் மட்டும் தான் விளையாடுவோம் என்றால், கிரிக்கட் அழிந்து விடும். ஐ.பி.எல். மட்டும் வளர்ச்சியடைந்து விடும் என்றார்.
இதுகுறித்து அவுஸ்திரேலிய தமிழர்கள் கூட்டமைப்பை சேர்ந்த ராஜகுலேந்திரன் கூறுகையில், விளையாட்டில் அரசியலை கலக்கக் கூடாது என்பது சரிதான். ஆனால், சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக, தமிழக மக்கள் சித்ரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளனர். முன்பு பாதுகாப்பு பிரச்சினை இருந்தது. இப்போது மனித உரிமை மீறல் நடந்துள்ளது. இதே காரணங்களுக்காகத் தான் முன்பு தென் ஆப்பிரிக்கா, தற்போது ஜிம்பாப்வே, பாகிஸ்தானுக்கு செல்லவில்லை. அப்படியிருக்க, இப்போதும் ஏன் அதுபோன்ற முடிவு எடுக்கக்கூடாது. வீரர்கள் அனைவரும் இணைந்து புறக்கணிக்கும் முடிவை அரசிடம் தெரிவிக்கவேண்டும் என்றார்.

இந்திய அணியில் யுவராஜ் சிங், ரெய்னா இடையே கடும் போட்டி: குழப்பத்தில் கப்டன் டோனி

 சச்சின் உள்ளிட்ட மூத்த வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ள நிலையில், மிடில் ஓர்டரில் காலியாக உள்ள ஒரு இடத்துக்கு சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.
இதில் யாரை தெரிவு செய்வது என்ற குழப்பத்தில் கப்டன் டோனி உள்ளார். சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பை தொடருக்கான அணியில், நீண்ட இடைவெளிக்குப் பின் இடம் பெற்றார் யுவராஜ் சிங். இதனால் ரெய்னாவுக்கு விளையாடும் லெவன் அணியில் இடம் கிடைக்காது என்று பேசப்பட்டது. ஆனால், யூசுப் பதானை களத்துக்கு வெளியே உட்கார வைத்துவிட்டு, யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு தந்தார் டோனி. இதை கெட்டியாக பிடித்துக் கொண்ட யுவராஜ் சிங், தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். இதனால், ஒருநாள் போட்டிக்கான அணியில் நிரந்தர இடத்தை தக்கவைத்துக் கொண்டார். தற்போது டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கவும், இவருக்கு சோதனை ஏற்பட்டுள்ளது.
துவக்கத்தில் காம்பீர், அபினவ் முகுந்த் இடம் உறுதியாகி விட்டது. அடுத்து மிடில் ஓர்டரில் மூத்த வீரர்கள் சச்சின், டிராவிட், லட்சுமண் இருப்பதால், ஒரு இடம் மட்டுமே காலியாக உள்ளது. பின் வரிசையில் கப்டன் டோனி இடம் பெறுவர். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், வாய்ப்பு யாருக்கு செல்லும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
ஏனெனில், இடது கை துடுப்பாட்ட வீரர்களான இருவரும், சிறந்த போராட்ட குணம் உடையவர்கள். களத்தில் துடிப்பாக களத்தடுப்பு செய்வர். தேவையான நேரங்களில் பந்துவீச்சு செய்து, விக்கெட் வீழ்த்தும் திறமை பெற்றவர்கள்.
ரெய்னாவைப் பொறுத்தவரையில், கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் 3 அரைசதம் உட்பட 232 ரன்கள் (சராசரி 46.40) எடுத்துள்ளார். இவரது பலவீனம் என்று கருதப்பட்ட "ஷோர்ட் பிட்ச்” பந்துகளை, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நன்கு சமாளித்தது, இவர் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. இவரது சுழற்பந்து வீச்சு இங்கிலாந்து வீரர் சுவானுக்கு பதிலடியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
அதேநேரம், உலகக் கோப்பை தொடர் நாயகன் யுவராஜ் சிங், கடைசியாக பங்கேற்ற 11 டெஸ்ட் போட்டியில் 7 அரைசதங்கள் அடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக இவரது சராசரி 40 க்கும் மேலாக உள்ளது. இவருக்கு ஏற்கனவே அதிகப்படியான வாய்ப்புகள் வழங்கப்பட்டு விட்டன என்று கூறுவது அழகல்ல. ஏனெனில் ரெய்னாவுக்கு 22 வயது தான் ஆகிறது. இதனால் ரெய்னா இன்னும் காத்திருக்கலாம். தவிர, இங்கிலாந்தின் பீட்டர்சனுக்கு இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் என்றால் அவ்வளவு தான். விரைவில் அவுட்டாகி விடுவார்.
2008 ல் இந்தியா வந்த போது, இவரை பெரும்பாலும் அவுட்டாக்கியது யுவராஜ் சிங் தான். இது யுவராஜ் சிங்கிற்கு சாதகமாக உள்ளது. மற்றபடி, துடுப்பாட்ட திறமையை பொறுத்தவரையில் ரெய்னாவை விட, யுவராஜ் சிங் முன்னிலையில் உள்ளார்.
ஒருவேளை ரெய்னாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, யுவராஜ் சிங் ஒதுக்கப்பட்டால் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்புவது என்பது, எப்போதும் இயலாத காரியம் தான். காயத்தால் அவ்வப்போது அவதிப்பட்ட இவரது 12 ஆண்டுகால கிரிக்கட்டில், 34 டெஸ்டில் (1639) பங்கேற்ற திருப்தி மட்டுமே கிடைக்கும்.
இவர்களில் யாரை தெரிவு செய்வது என்பது டோனியின் கையில் தான் உள்ளது. யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு கொடுக்கலாம் என டோனி நினைத்தால், பின் தொடர் முழுவதும் ரெய்னா, வெளியில் தான் இருக்க வேண்டும்

பவுர்ணமி நிலவில் தாஜ்மஹாலை ரசிக்கும் தீபிகா


தாஜ்மஹாலைக் காதலிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா. ராணா நாயகி தீபிகா படுகோனேவும் இதற்கு விலக்கில்லை.
உலக அதிசயத்தில் ஒன்றாகவும், காதலின் சின்னமாகவும் கம்பீரமாக காட்சியளிக்கும் தாஜ்மஹாலுக்கு கடந்த ஆண்டில் மட்டும் தீபிகா 3 முறை சென்றுள்ளார். அதுவும் பவுர்ணமி அன்று தனியாகச் சென்று ரசித்திருக்கிறார்.
பவுர்ணமி நிலவே அழகு, அந்த அழகு நிலவின் வெளிச்சத்தில் தாஜ்மஹால் கொள்ளை அழகாகத் தெரியும். இதை பார்த்து ரசிக்கத்தான் தீபிகா தனியாகச் சென்றாராம். தீபிகாவின் இந்த ரகசிய தாஜ்மஹால் விசிட் அவர் நண்பர்களில் சிலருக்கு மட்டும் தான் தெரியுமாம்.
கடந்த ஆண்டு சூட்டிங்கிற்காக முதன்முதலாக தாஜ்மஹால் சென்றுள்ளார். அதன் அழகில் மயங்கி திரும்பத் திரும்ப சென்று கொண்டிருக்கிறார். தாஜ்மஹாலில் அப்படி என்னதான் பார்த்தாய்? என்று நண்பர் ஒருவர் கேட்டதற்கு தீபிகா கூறியதாவது, நிலா வெளிச்சத்தில் தாஜ்மஹாலை பார்த்துக் கொண்டே இருப்பது நிம்மதியைத் தருகிறது என்று பதிலளித்தாராம்.
இந்தக் கேள்வியை தீபிகாவிடம் கேட்டிருக்கவே வேண்டாம். காரணம் சித்தார்த் மல்லையாவை காதலிக்கும் அவர் நிலவொளியில் தனிமையில் என்ன மாதிரி மனநிலையில் இருந்திருப்பார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறதல்லவா.

இணையத்தில் தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்து ரசிக்க

இணையத்தில் திரைப்படங்களை பார்த்து ரசிப்பதில் அனைவருக்கும் தனி விருப்பமுண்டு. குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களை பார்பதற்கென ஏராளமான தளங்கள் உள்ளன.

எனினும் சிலவற்றைப் பற்றியே நாம் அறிந்துள்ளோம்.

இன்று எமது செய்தியானது அத்தகைய தளங்கள் சிலவற்றைப் பற்றியது.




இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் காணொளிகள் காணப்படுகின்றன.





இந்தத் தளத்திலும் பல புதிய படங்கள் காணப்படுகின்றன. இந்தத் தளத்தில் திரைப்படங்களைப் புதியவை, பழையவை, இடைக்காலத்தவை என்று தனித்தனியாக வகைப் படுத்தி உள்ளனர்.




இணையத்தில் பழைய திரைப்படங்களைத் தேடுபவர்களுக்கான தளம் இது.


4)

Tamil Peek





இந்தத் தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்கள் காணப்படுகின்றன. இந்தத் தளத்தில் படங்களை புதிய படங்கள் ,பழைய படங்கள் என இரு வகையாகப் பிரித்து வைத்துள்ளனர்.

5)

Tamil tvs.com




இந்தத் தளத்தில் புதிய, பழைய படங்கள் காணப்படுகின்றன.

6)Good
Lanka




இந்தத் தளத்தில் புதிய மற்றும் பழைய திரைப்படங்களின் வீடியோ பாடல்களைக் கேட்டு மகிழலாம். அகர வரிசைப்படி படங்களை வரிசைப்படுத்தி உள்ளனர்.

7)Tube
Kolly


இத்தளத்திலும் பல புதிய, பழைய திரைப்படங்கள் காணப்படுகின்றன.

8)TamilVix



இந்தத் தளத்திலும் பல புதிய படங்கள் காணப்படுகின்றன.

9)Rajshree



இந்தத் தளத்திலும் தமிழ்த் திரைப்படங்களை இலவசமாகப் பார்த்து ரசிக்கலாம்.

10)Thiruttu
VCD



இந்தத் தளத்திலும் தமிழ்த் திரைப்படங்களை இலவசமாகப் பார்த்து ரசிக்கலாம்

சீனாவில் தோன்றிய கடல் கன்னி

சீனாவில் உள்ள கடல் கரை ஒன்றில் கடல் கன்னி ஒருவர் சில வாரங்களுக்கு முன் தோன்றி இருந்தார் என்று இணையங்களில் படங்களுடன் பரபரப்பான செய்தி வெளியாகி உள்ளது.

ஆயினும் இது உண்மையிலேயே கடல் கன்னியின் உருவம்தானா? அல்லது பம்மாத்து வேலையா? என்பதை உறுதிப்படுத்த முடியாது உள்ளது. படங்களை பார்த்து நீங்களே முடிவு எடுங்கள்.







Tuesday, July 12, 2011

இலங்கைத் தமிழ் மிகவும் அழகான தமிழ், இத்தமிழை என் மனைவி மூலம் ஒவ்வொரு நாளும் கேட்டு இரசிக்கின்றேன்

இலங்கைத் தமிழ் மிகவும் அழகான தமிழ் என்று சிலாகித்து உள்ளார் தென்னிந்திய நடிகர்களில் ஒருவரான விஜய். இவர் தென்னிந்திய தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அண்மையில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழர்கள் நால்வர் கூடவே பங்கேற்று இருந்தனர். இலங்கைத் தமிழர்கள் விஜயிடம் கேள்விகள் கேட்டனர். பதில் கூறிக் கொண்டு சென்றபோது இலங்கைத் தமிழர்கள் கதைக்கின்றவற்றைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம், இலங்கைத் தமிழ் மிகவும் அழகான தமிழ், இத்தமிழை என் மனைவி மூலம் ஒவ்வொரு நாளும் கேட்டு இரசிக்கின்றேன் என்றார் விஜய்.

கடலுக்கடியில் வெடித்த எரிமலை

இடிக்கப்படுகிறது விஜய்யின் திருமண மண்டபம்?

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க விரைவில் கட்டப்படவிருக்கும் மேம்பாலப் பணிகளுக்கு இடம் தேவைப்படுவதால், நடிகர் விஜய்யின் திருமண மண்டபம் இடிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

போரூர் சிக்னல் அருகே போக்குவரத்து நெரிசல் மிக அதிகம். இப் பிரச்சனையை போக்க அந்த பகுதியில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, ரூ.34 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பாலம் கட்டுவதற்கு இடம் தேவைப்படுவதால் அங்குள்ள கடைகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நஷ்டஈடு வழங்கியது. கடைகளை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டும் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் கடைகளை காலி செய்யவில்லை.

இந்நிலையில் மேம்பாலம் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஆரம்பித்துவிட்டன. இன்று காலை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தலைமையில் 100க்கு அதிகமான ஊழியர்கள் வந்தனர். ஜேசிபி இயந்திரம் மூலம் கடைகளை இடித்து அப்புறப்படுத்தினர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதே பகுதியில் நடிகர் விஜய்க்கு சொந்தமான சங்கீதா திருமண மண்டபம் உள்ளது. மேம்பால பணிகளுக்காக திருமண மண்டபத்தின் முன்பக்கம் இடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், கடைகள் இடிக்கப்படுவதால் வியாபாரிகள் திரண்டு வந்தனர். பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். கடைகள் இடிக்கப்பட்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதேபோன்றதொரு மேம்பாலப் பணிகளுக்காகத்தான் முன்பு விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் மண்டபம் இடிக்கப்பட்டது. அதுவே அவரை அன்றைய ஆளுங்கட்சியான திமுக வுக்கு எதிராக பொங்கவைத்தது.

இப்போது விஜய்யின் மண்டபத்துக்கு அப்படி ஒரு ஆபத்து வந்துள்ளது.

விஜய்க்கு சொந்தமாக பல திருமண மண்டபங்கள் உள்ளன. மாவட்டந்தோறும் ஒன்று மண்டபத்தை உருவாக்கும் திட்டமும் அவருக்குள்ளது. சென்னையில் மட்டும் ஷோபா, ஜேஎஸ்ஆர் உள்பட சில திருமண மண்டபங்கள் உள்ளன

Saturday, July 9, 2011

எந்திரனால் பெரும் நஷ்டம்- சன் பிக்சர்ஸ் மீது குவியும் புகார்கள்!

Rajanikanth and Aishwarya Rai
மிகப் பெரிய வசூலை எட்டியதாக கூறப்பட்ட எந்திரன் படத்தால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்ததாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறத் தொடங்கியுள்ளது திரையுலகினரை மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, ஷங்கர் இயக்க உருவாகிய படம் எந்திரன். முதலில் இப்படத்தைத் தயாரிப்பதாக இருந்தது ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம்தான். ஆனால் திடீரென படத்தை சன் டிவி பக்கம் கொண்டு போனார் ஷங்கர். ஐங்கரன் பட நிறுவனத்துக்கும், ஷங்கருக்கும் ஒத்துப் போகவில்லை என்று அப்போது பேசப்பட்டது.

சன் டிவி பக்கம் எந்திரன் வந்ததும் மிகப் பெரிய பொருட் செலவில் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. பணத்தை வாரியிறைத்து படத்தை உருவாக்கி வெளியிட்டனர்.

இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு இப்படம் வசூலை வாரிக் கொட்டியதாக கூறப்பட்டது. சன் டிவியிலும் படத்திற்கு மிகப் பெரிய பில்ட்டப் கொடுத்து விளம்பரப்படுத்தி வந்தனர்.

இப்படத்தால் அனைத்துத் தரப்பினரும் மிககப் பெரிய பலனையும், லாபத்தையும் அடைந்ததாகவும், தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி ஒரு வசூல் வந்ததே இல்லை என்றும் கூறி வந்தனர்.

ஆனால் இப்போது எந்திரன் படத்தால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தாக தியேட்டர் உரிமையாளர்கள் புகார் கூறத் தொடங்கியுள்ளதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த 6 தியேட்டர் உரிமையாளர்கள் எந்திரன் படத்தால் ரூ. 1.55 கோடி அளவுக்கு தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி புகார் கொடுத்துள்ளனர். புகாரில், சன் பிக்சர்ஸ் தலைமை செயலதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அய்யப்பன் ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளனர்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த ஏடிஎஸ்சி திரையரங்கம், திருப்பூரைச் சேர்ந்த கே.எஸ். மற்றும் கஜலட்சுமி திரையரங்குகள், ராமநாதபுரத்தை சேர்ந்த ரமேஷ் தியேட்டர், ராஜபாளையம் ஆனந்த், பழனி சினிவள்ளுவர் ஆகிய திரையரங்குகளின் உரிமையாளர்கள் தனித்தனியே புகாரை அளித்துள்ளனர்.

அதில்,

எந்திரன் திரைப்படத்தை சதவீத அடிப்படையில் ஒப்பந்தம் செய்து பணத்தை டெபாசிட் செய்து படத்தை பெற்று எங்களது தியேட்டர்களில் வெளியிட்டோம். இந்த படத்தின் மூலம் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை கழித்துக் கொண்டு டெபாசிட் பணத்தில் பாக்கியை தர வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அணுகினோம்.

ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. பல முறை கேட்டும் முறையான பதிலையும் சொல்லவில்லை. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் மூலம் கேட்டபோது இதோ தருகிறோம், அதோ தருகிறோம் என கூறி வேண்டுமென்றே அலைக்கழித்து வந்தனர்.

இதனால் தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பரிந்துரையின் பேரில் நாங்கள் தனிப்பட்ட முறையில் புகார் தெரிவித்துள்ளோம். எங்களுக்கு தர வேண்டிய 1கோடியே 55 லட்சத்து 16,431 ரூபாயை பெற்றுத்தர வேண்டும் என கோருகிறோம்.

இதில், பொள்ளாச்சி ஏடிஎஸ்சி ரூ.40,10 761, திருப்பூர் கே.எஸ். ரூ.10,32,956, கஜலட்சுமி ரூ.28 லட்சம். ராமநாதபுரம் ரமேஷ் ரூ.27,00,016, ராஜபாளையம் ஆனந்த் ரூ.27,98,114, பழனி சினிவள்ளுவர் ரூ.21,83,600 நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.

இந்த ஆறு பேரைத் தவிர மேலும் பல தியேட்டர் உரிமையாளர்கள் எந்திரன் பட நஷ்டம் தொடர்பாக போலீஸில் புகார் கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

எந்திரன் படத்தால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்ததாக தியேட்டர் உரிமையாளர்கள் புகார் கொடுக்கத் தொடங்கியிருப்பது திரையுலகில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Friday, July 8, 2011

ஃபேஸ்புக்கை ஒரு கை பார்க்க வரும் கூகுள் ப்ளஸ்!!

Google Plus

சமூக வலை தளங்கள் எனப்படும் ஃபேஸ் புக் மற்றும் ட்விட்டரின் வரவு ஜாம்பவான் இணைய தளங்களை அசைத்துப் பார்த்துவிட்டன.

இதன் விளைவு பெரிய நிறுவனங்களும் ஒரு சமூக வலைத் தளத்தை ஆரம்பிக்க வேண்டிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளன.

அந்த வகையில், தனக்கு பெரும் போட்டியாகத் திகழும் ஃபேஸ்புக்கை சமாளிக்க தானும் ஒரு சமூக வலைத்தளத்தை ஆரம்பிக்கிறது உலகின் நம்பர் ஒன் இணையதளமான கூகுள் நிறுவனம்.

இதற்கு கூகுள் ப்ளஸ் என பெயரிட்டுள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலைப்பதிவில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

சமூக இணையத்தளம் எனப்படும் சமூகவலை தளங்களில் மக்கள் பெரும் ஆர்வம் க‌ாட்டி வருகின்றனர்.

அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக சமூக இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டிருந்தது. தற்போது கூகுள் பிளஸ் என்ற பெயரில் புதிய ‌தொழில்நுட்பத்திலான சமூக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த புதிய சமூக இணையத்தளம் பேஸ்புக் தளம் போன்றதுதான் என்றாலும், அதைவிட கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது. இந்த புதிய சேவையினை ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் மொபைல் ஷாப்களிலும் பெற்றுக்கொள்ளலாம். இப்போது சோதனை ஓட்டமாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சர்க்கிள்ஸ், ஸ்பார்க்ஸ், ஹேங்அவுட்ஸ் மற்றும் மொபைல் உள்ளிட்ட ‌சிறப்பம்சங்களை உள்ளடக்கியது இந்த புதிய தளம். வரும் நாட்களில் இந்த தளம் வாடிக்கையாளர்களின் அபிமானத்துக்குரிய தளமாக மாறும் என நம்புகிறோம்."

-இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

முதல் கட்டமாக குறிப்பிட்ட பயனாளர்களுக்கு கூகுள் ப்ளஸ் அழைப்பு அனுப்பி வருகிறது.

இன்றைய தேதிக்கு பேஸ்புக்கிற்கு 600 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர். இத்தனை வலுவான பேஸ்புக்கை கூகுள் ப்ளஸ் ஒரு கை பார்க்குமா... பார்க்கலாம்!

Corgis Run On Treadmill

Corgis Run On Treadmill

Sunday, July 3, 2011

ஆராய்சி செய்தி கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தினால் மூளை புற்றுநோய் வராது: ஆய்வில் தகவல்




கடந்த 1980ம் ஆண்டுகளில் இருந்து கைத்தொலைபேசிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கைத்தொலைபேசிகளை அதிக அளவில் பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
இதற்கிடையே சமீபத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா, சுவீடன் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் இதுகுறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் கைத்தொலைபேசிகளை அதிகம் பயன்படுத்துவதால் அதில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சினால் மூளை புற்றுநோய் ஏற்படாது. அதற்கான சாத்திய கூறுகள் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் கைத்தொலைபேசி பயன்பாட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

லோட்ஸ் மைதானத்தில் புலிக் கொடியுடன் ஓடிய தமிழ் இளைஞன்

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இளைஞர் ஒருவர் புலிக் கொடியுடன் ஓடி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இன்று இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன் போது தமிழீழ இளைஞர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்தியவாறு மைதானத்தில் ஓடியுள்ளார்.