
இதுதொடர்பாக அல்கொய்தா வெளியிட்டுள்ள அறிக்கை அந்த இயக்கத்தின் இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில்,"ஜவாஹிரி தலைமையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களுக்கு உதவும் நாடுகளுக்கு எதிரான புனிதப் போர் தொடரும். இஸ்லாமிய மண்ணை ஆக்கிரமித்துள்ளவர்கள் வெளியேறும் வரை எங்கள் போர் தொடரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 2ம் திகதி அல்கொய்தாவின் தலைவரான பின்லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க அதிரடிப் படையினரால் கொல்லப்பட்டார். இதையடுத்து அந்த இயக்கத்தில் இரண்டாம் நிலை தலைவராக இருந்து வந்த அல் ஜவாஹிரி புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment